அமெரிக்காவில் உள்ள முன்னணி சர்வதேச மனிதாபிமான அமைப்பான HOPE Worldwide, இலங்கையர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக 2.74 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் ஒருங்கிணைக்கப்படும் என அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் அமெரிக்க நிறுவனங்கள் வழங்கிய மருத்துவ உதவியின் மொத்த மதிப்பு 12 மில்லியன் டொலர்களை கடந்துள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள ஏழைகள், நோயாளிகள் மற்றும் துன்பப்படுபவர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் HOPE Worldwide 1991 இல் நிறுவப்பட்டது.
Post a Comment