கொழும்பு தேசிய வைத்தியசாலை நோயாளர்களிடமிருந்து பணம் திருடுவோர் தொடர்பில் தகவல்...!


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களின் பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் தங்க நகைகளை திருடுவோர் தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன.

நோயாளர்களை பார்வையிட செல்லும் போர்வையில், குறித்த குழுவினர் திருட்டில் ஈடுபடுவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதற்கு வைத்தியசாலையிலுள்ள சில ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

நோயாளர்களின் பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் தங்க நகைகளை திருடிய சிலர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post