நிலக்கரி ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் இலங்கைக்கு...!


நிலக்கரி கப்பலொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரியை ஏற்றிய கப்பலே, இங்கு வருகிறது. இக்கப்பல், நாட்டுக்கு வருகை தந்ததும், தரையிறக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், நிலக்கரி கிடைக்கப்பெற்றதும் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க முடியுமென, நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post