திடீர் சுகயீனம் காரணமாக 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி...!


மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வென்னபுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

Previous Post Next Post