குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்…!


பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கணினி கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் கணினிக் கடடமைப்பை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரமைக்கப்பட்ட பின்னர் கடவுச் சீட்டு விநியோகப் பணிகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post