சவுதி அரேபியாவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாரியளவிலான கட்டுமான திட்டங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், தகுதியான இலங்கையர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆரம்பித்துள்ளது.
கட்டடக்கலை நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் அளவீட்டாளர்களுக்கு, தொடர்புடைய திட்டங்களில் பல வேலை வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்பதால், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் என்பன, இலங்கை நிபுணர்களுக்கு அந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
Post a Comment