புலம்பெயர்வோருக்கு இனி நியூயோர்க்கில் இடமில்லையா.? முழு விபரம்…!



புலம்பெயர்ந்து வருவோருக்கு “இனி நியூயோர்க்கில் இடமில்லை” என்று நியூயோர்க்கின் நகர மேயர் அறிவித்தார்.

நியூயோர்க்கில் புலம்பெயர்ந்தோரினால் ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் நியூயார்க்கின் நகர மேயர் விமர்சித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வருவோர்களுக்கு வழங்கப்படும் அதிக சலுகைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும் அவர் விமர்சித்துள்ளார்.

நியூயோர்க்கிற்குள் குடியேறுபவர்களின் வருகையால் நகரத்திற்கு $2 பில்லியன் வரை செலவாகும் என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post