வாகன இறக்குமதிக்கான வரிகளை டொலரில் செலுத்தும் முறை அறிமுகம்?...!



இலங்கையில் ஐந்தில் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களில் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இவற்றில் 75% வாகனங்கள், வங்கிக் கடன் அடிப்படையில் பெறப்பட்டவை என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (09) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதிக்கான வரிகளை டொலரில் செலுத்தும் முறையை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2015 முதல் 2020 வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,498,714 ஆகும். ”

Post a Comment

Previous Post Next Post