இந்திய மருத்துவமனை ஒன்றில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழப்பு...!!



இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணங்கள் மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் பத்து பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவர்.

இறந்தவர்களில் 12 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்

இறந்தவர்களில் சிறுநீரகம், முடக்குவாதம், நிமோனியா மற்றும் விஷம் குடித்த நோயாளிகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post