கொழும்பு - கல்கிஸ்ஸையில் கரை ஒதுங்கிய அரிய வகை மீனினம்


கல்கிஸ்சை கடற்கரையில் அரிய வகை மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது கல்குல்லா அல்லது ஹீல்ஸ் (Heels) என்று அழைக்கப்படும் மீனினம் என கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவை உணவுக்காக எடுத்துக் கொள்ளப்படாத மீன் வகை பெரும்பாலும் ஆழ்கடலில் இனமாகும்

அரியவகையாக காணப்படும் இவை மற்ற மீன்களின் உடல் நிறத்தில் இருந்து வேறுபட்ட தோல் புள்ளிகள் காணப்படும்.

பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கிறது மற்றும் தரைக்கு வராத இனமாகும்.

ஆழ்கடலில் உள்ள பாறைகளைச் சுற்றி கடற்றொழிலாளர்கள் வீசிய வலைகளில் சிக்கியிருக்கலாம் அல்லது போர்க்கப்பல்களிருந்து வெளியேறும் திரவம் தேங்கி நிலத்திற்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நன்றி...
தினகரன்

Post a Comment

Previous Post Next Post