நைஜீரியா: பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில்...!


மத்திய நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோஸ் மாநிலத்தில் உள்ள செயின்ட் அகாடமி பாடசாலை கட்டிடம் ஒன்று விழுந்துள்ளது.

இந்த பாடசாலையில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், இதனால் மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தெரியவராத போதிலும், குறித்த பகுதியில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post