நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!



நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தெரிவித்துள்ளது. அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 11,078 ஆகும்.

கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post