4.8 மெக்னிடியூட் அளவில் நேபாளத்தில் அதிர்வு...!



இன்று (21) அதிகாலை நேபாளத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.4.8 மெக்னிடியூட் அளவில் இந்நில அதிர்வு பதிவானதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு 7.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகளால் சுமார் 9,000 பேர் வரையில் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post