54 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் எதற்காக இடமாற்றம்...!



பிரதி காவல்துறைமா அதிபர்கள், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 54 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகச் செயற்பட்ட மகளிர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஐ.எஸ் முதுமால அந்த திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 5 பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post