நாட்டில் டெங்கு நோய் தீவிரம்..!



இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்தில் 20,218 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 11,857 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post