தற்போதைய க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு அமெரிக்கத் தூதுவர் பாராட்டு...!



அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘க்ளீன் ஸ்ரீலங்கா‘ திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புதிய நடைமுறைகளுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளை முன்னேற்றுவதற்கான நிதி, தொழில்நுட்பம், அறிவு மற்றும் பௌதீக ஆதரவை வழங்க அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கும் ஆதரவு மற்றும் மானியங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post