மெஸ்ஸிக்கு அபராதம் எதற்காக...!!



கடந்த செவ்வாயன்று (26) நடந்த இன்டர் மியாமிக்கு எதிரான ஸ்போர்ட்டிங் கன்சாஸ் சிட்டி போட்டியில் எதிரணி பயிற்சியாளரின் கழுத்தை பிடித்து இழுத்ததற்காக முன்னணி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கு, வெளிப்படுத்தப்படாத தொகை அபராதம் விதிக்கப்பட்டது.

மேஜர் லீக் ஒழுங்குமுறைக் குழுவால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

இன்டர் மியாமு மற்றும் ஸ்போர்ட்டிங் கன்சாஸ் சிட்டி போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் செயல் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்த வீடியோ காட்சிகள் மெஸ்ஸி பயிற்சியாளரை நெருங்கி அவரது கழுத்தின் பின்புறத்தைப் பற்றிக் கொண்டிருப்பதைக் காட்டியது.

மியாமியில் நடந்த 2-2 என்ற சமநிலை போட்டியின் பின்னரான அவரது செயல் மெஸ்ஸியை எட்டு முறை பலோன் டி’ஓர் விருதில் இருந்து விலகச் செய்தது.

Post a Comment

Previous Post Next Post