பெந்தோட்டை- பொல்கொட பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
25 வயதுடைய ஜோர்தானிய பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment