இதுதான் Clean Srilanka வா...!



திருகோணமலை கடற்கரையின் கரையோர பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் மற்றும் திருகோணமலை நகர சபை இணைந்து நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

திருகோணமலை நகர சபை ஊழியர்கள் உள்ளிட்ட 120 பேர் இதில் பங்கேற்றனர்.

இதன்போது ஒருகிலோ மீற்றர் கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post