கொழும்பில் உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் - உலக உணவு திட்டம்...!


இலங்கையில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி உணவுப்பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான உதவிகள் கிடைக்காவிட்டால் ஒக்டோபர் மாதம் முதல் 2023 பெப்ரவரி வரை இலங்கை நிலவரம் மோசமடையும் என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நகரப்பகுதிகளில் உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் இது ஏற்கனவே நலிவடைந்த நிலையி;ல் உள்ள சமூகத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரப்பகுதியில் உணவுப்பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது ஆகஸ்ட் மாதம் 93.7 வீதமாக காணப்பட்ட உணவுப்பணவீக்கம் செப்டம்பரில் 94.9 வீதமாக காணப்பட்டது என கொழும்பு நுகர்வோர் விலை சுட்டி தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் ஸ்திரமற்ற விலைகள் குறித்து சந்தைகள் அதிக கரிசனையை வெளியிட்டுள்ளன,என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் அவசர நடவடிக்கைகள் ஆரம்பித்தது முதல் 209,344 மக்களிற்கு நிதி உதவி செய்துள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

Previous Post Next Post