போதைப்பொருள் பாவனையை ஒழித்து வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்குமாறு கோரி யாழில் பேரணி..!



தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் புதன்கிழமை (ஒக் 26) விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது.

வலி வடக்கு பிரதேச சபை, தெல்லிப்பளை உப அலுவலகம் மற்றும் தெல்லிப்பளை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் ஆரம்பித்த இப்பேரணி தெல்லிப்பளை சந்தியில் நிறைவடைந்தது.

போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், ப்ளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பாலின சமத்துவத்தை பேணல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

இதில் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.













நன்றி...
வீரகேசரி

Post a Comment

Previous Post Next Post