யாழ்தேவி கடுகதி ரயில் தடம் புரண்டதால் வடக்குப் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (05) பிற்பகல் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் புனேவ பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, இரண்டு இரவு நேர தபால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பில் இருந்து காங்கேசன் துறைக்கான ரயில் சேவையும், காங்கேசன் துறையில் இருந்து கொழும்பிற்கான ரயில் சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டுள்ள வடக்கு ரயில் சேவையை மீளப் வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment