காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 (27th Conference of the Parties of the UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (06) எகிப்திற்கு பயணமாகவுள்ளார்.
எகிப்தின் Sharm El-Sheikh-இல் நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பிரதான நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றம் தொடர்பான யுக்திகள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment