கொழும்பு நோக்கி வரும் மக்களுடன் இணைந்த சரத் பொன்சேகா...! (Video)


கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02.11.2022) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

மருதானையில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பிற்கு வரும் மக்கள்:

இந்த நிலையில் இந்த மாபெரும் போராட்டத்தில் இணைவதற்காக கொழும்பு நோக்கி வரும் பேரணியில் களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இணைந்துள்ளார்.
 


நன்றி...
LANKASRI

Post a Comment

Previous Post Next Post