வாரிசு படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கூறுவது என்ன?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என படம் பார்த்த ரசிகர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் உலகமெங்கும் இன்று வெளியானது.

நேற்று இரவே சென்னையில் வாரிசு படத்தில் சிறப்புக் காட்சி வெளியானது. அதில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ, நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி, நேற்று இரவில் இருந்தே வாரிசு படத்தின் விமர்சனம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

ரசிகர்களுக்கான முதல் காட்சி தமிழ்நாட்டில் இன்று காலை 4 மணிக்கு வெளியானது. சென்னையில் முதல் காட்சியை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள், வாரிசு திரைப்படம் குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

"குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு"

"வாரிசு திரைப்படம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். பல வருடங்களுக்கு பிறகு கிளாசிக் விஜய்யை வாரிசு படத்தில் பார்த்தோம்," என்று ரசிகர் ஒருவர் தெரிவித்தார். குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் வாரிசு படம் அமைக்கப்பட்டுள்ளது," என ரசிகை ஒருவர் பேசினார்.

"குடும்ப படமாக இருந்தாலும், திரையில் பார்க்க சீரியல் போல இருக்கிறது," என படம் குறித்து தனது விமர்சனத்தை ரசிகர் ஒருவர் முன்வைத்தார்.

Post a Comment

Previous Post Next Post