முல்லைத்தீவில் 103 அகதிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டு மக்களின் நிலை...!



முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 103 பேர் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த கப்பலில் பெண்கள், சிறுவர்களும் வயோதிபர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post