ஆசிரியர் பரீட்சைக்கான விண்ணப்பம்...!



ஆசிரியர் கல்லூரிகளின் இறுதி பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களின் பயிற்சி பாடநெறிகளுக்கான பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இணையம் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic க்கு பிரவேசித்து வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி விண்ணப்பங்களை இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post