பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தீர்மானம்...!




பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்ற போதிலும், தட்டுப்பாடு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகவே உள்ளது என அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில், பெப்ரவரியில் கிட்டத்தட்ட 300 புதிய நியமனங்கள் வழங்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post